சினிமா

‘தலைவி’ படம் : சசிகலா கதாபாத்திரத்தில் ‘ப்ரியாமணி’ ?

webteam

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் “தலைவி” திரைப்படத்தில் சசிகலா ஆக பிரியாமணி நடிக்கவுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 3 ஆண்டுகளுக்கு முன்பு 2016ஆம் ஆண்டு இதேநாளில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை இன்று பலரும் படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இயக்குநர் விஜய், “தலைவி” என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் பாலிவுட்  நடிகை கங்கனா ரனவுத், ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். இத்தப் படத்திற்காக கங்கனா தமிழ் மற்றும் பரதநாட்டியம் கற்றுக்கொண்டு வருகிறார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அவரது நெருங்கிய நண்பரான சசிகலாவின் கதாபத்திரம் இன்றி கூற இயலாது என்பதால் அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், சசிகலாவின் கதாபத்திரத்தை நடிகை ப்ரியாமணி நடிக்கவுள்ளார்.

தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப்படத்தில் அரவிந்த் சாமி, எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தோடு பொருந்துவதற்காக அரவிந்த் சாமி கிலின் ஷேவ் செய்து நடித்த புகைபடங்கள் இணையத்தளங்களில் வைரலாக பரவி வந்தன.