சினிமா

நடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்குப்பதிவு

Rasus

சென்னை எழும்பூரில் ஹோட்டல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராய் கலந்து கொண்டவர் மீரா மிதுன். சக போட்டியாளர்களுடன் அவர் நடந்து கொண்ட விதம் நிகழ்ச்சியில் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், நிகழ்ச்சிக்கு பிறகு வெளியான அவரது மிரட்டல் ஆடியோக்கள் இன்னும் அதிகமாய் பேசப்பட்டது.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மும்பையில் பாதுகாப்பாக உணர்வதால் அங்கு வசிப்பதாகவும், தமிழகத்தில் போதிய பாதுகாப்பு இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தமிழக போலீசார் மீது பல விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் ஹோட்டல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரை விமர்சித்து பேசிய பேட்டி குறித்து கேட்ட ஹோட்டல் அதிகாரி அருணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகாரையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.