சினிமா

மக்கள் அனைவரும் திரையரங்கில் படம் பார்க்க வேண்டும்: நடிகை ரம்யா நம்பீசன் வேண்டுகோள்

Veeramani

மக்கள் அனைவரும் திரையரங்கில் படம் பார்க்க வேண்டும் என்று நடிகை ரம்யா நம்பீசன் வேண்டுகோள் வைத்துள்ளார். திரையரங்கில் படம் பார்ப்பது ஒரு மேஜிக் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பீட்சா, சேதுபதி உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன். இவர் தற்போது 'பிளான் பண்ணி பண்ணனும்' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய ரம்யா நம்பீசன், பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம் மிக நகைச்சுவையாக எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். கொரோனா நெருக்கடியை கடந்து வெளியாகும் இந்த திரைப்படத்தை மட்டுமல்லாமல், மற்ற திரைப்படங்களையும் ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். 

மேலும் திரையரங்கில் படம் பார்ப்பது மேஜிக்!  அது போன்ற ஒரு சுவாரஸ்யம் வேறு எதிலும் கிடைக்காது என்று கூறினார்.  மேலும் இந்த திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ள ரியோ ராஜ், இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் உள்ளிட்டோர் இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று நம்பிக்கையுடன் கூறினர். அத்துடன் பிளான் பண்ணி பண்ணனும் படத்தை ஓ.டி.டிவியில் நேரடியாக வெளியிட பல நிறுவனங்கள் முன்வந்தபோதும், திரையரங்கில்தான் வெளியிடுவோம் என தயாரிப்பாளர்கள் உறுதியாக இருந்தனர் எனக் குறிப்பிட்டனர். இந்த படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.