சினிமா

சாய்னா நேவால் படத்தில் இருந்து விலகினார் ஸ்ரத்தா

webteam

சாய்னா நேவாலின் வாழ்க்கை கதையை கொண்ட படத்தில் இருந்து நடிகை ஸ்ரத்தா கபூர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பரினீதி சோப்ரா நடிக்கிறார்.

பேட்மின்டன் சாம்பியனான சாய்னா நேவாலின் வாழ்க்கை கதை சினிமாவாகி வருகிறது. இந்தப் படத்தில் இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர், சாய்னா கேரக்டரில் நடிக்க இருந்தார். இதன் படப்பிடிப்பு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஐதராபாத்தில் தொடங்கியது. ’பாகுபலி’ ஹீரோ பிரபாஸ் படப் பிடிப்பை தொடங்கி வைத்தார். ’சாஹோ’ படத்தில் ஷ்ரத்தா நடித்து வருவதால் அந்த நட்பின் அடிப்படையில் ஷூட்டிங்கை அவர் தொடங்கி வைத்தார். 

(பரினீதி சோப்ரா)

அமோல் குப்தே இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது, ஸ்ரத்தாவுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. அதனால் ஓய்வெ டுக்கச் சென்றார். இதனால் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் இதன் ஷூட்டிங் மீண்டும் தொடக்க இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து ஸ்ரத்தா விலகியுள்ளார். ஷூட்டிங் செட்யூல் மாற்றி மாற்றி அமைக்கப்பட்டதால், இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாமல் அவர் விலகியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சாய்னா நேவால் கேரக்டரில் பரினீதி சோப்ரா நடிக்கிறார். 

இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் புஷன் கூறும்போது, ‘’இந்த வருட இறுதிக்குள் படத்தை முடித்து அடுத்த வருடம் ரிலீஸ் செய்ய திட்டமிட் டுள்ளோம். கால்ஷீட் பிரச்னை காரணமாக ஸ்ரத்தாவால் இதில் தொடர முடியவில்லை. இதனால் அவர் விலகி கொள்வதாகக் கூறினார். அவருக்கு பதில் பரினீதி நடிக்கிறார்’’ என்றார்.

இதில் நடிப்பது பற்றி பரினீதி கூறும்போது, ‘’இப்படியொரு வாய்ப்பு கிடைத்தது பெருமை. படத்துக்காக பேட்மின்டன் பயிற்சி எடுக்க இருக்கிறேன். இதன் ஷூட்டிங்கை ஆவலாக எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.