சினிமா

“இறந்த ரசிகையின் பெற்றோரையாவது பார்க்க ஆசை”- ஓவியா உருக்கம்

Sinekadhara

பிக்பாஸ் சீஸன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நடிகை ஓவியா பலரின் மனதில் இடம்பிடித்துவிட்டார். குறிப்பாக அவரின் நல்ல குணாதிசயங்களுக்காக அவருக்கு ஆதரவுத் தெரிவித்த பலரும் அவருக்கு ரசிகையாகி, ஓவியா ஆர்மியையே தொடங்கி அவரை ட்ரெண்டாக்கினர். ரசிகர்களின் அன்புக்கு சற்றும் குறைவில்லாமல் ஓவியாவும் அவர்களிடம் அன்பாகவே நடந்துவருகிறார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஓவியாவின் தீவிர ரசிகையும், @OviyaaSweetz என்ற ட்விட்டர் பக்கத்தின் அட்மினாக இருந்தவருமான சான்வி என்ற பெண் இறந்துவிட்டதாகவும், அவர் இறப்பதற்கு முன்பு ஒருதடவையாவது ஓவியாவை நேரில் பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டதாகவும், ஒருவர் தெரிவித்திருந்தார்.

இதைப் பார்த்த ஓவியா, தான் அந்த பெண்ணின் பெற்றோரை சந்திக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். அதில், ‘’இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த எதிர்பாராத இழப்புக்கு வருந்துகிறேன். சான்வியின் பெற்றோருடைய தொடர்பை தாருங்கள். எங்கிருந்தாலும் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்’’ என அவர் கூறியுள்ளார்.

நடிகையின் இந்த உருக்கமான பதிவு பலரின் இதயத்தையும் வென்றுள்ளது. அவருடைய இந்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். நீங்கள் மிகவும் இனிமையானவர், உங்கள் ரசிகர்கள்மீது எவ்வளவு அக்கறை’’ என்பதுபோன்ற பல கமெண்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

தற்போது இறந்த ரசிகையின் பெற்றோர்களை நேரில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார் ஓவியா.