சினிமா

'நேர்கொண்ட பார்வை'யின் வசூல் நிலவரத்தை வெளியிட்ட போனி கபூர்!

webteam

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் படத்தின் வெளிநாட்டு வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன ‘பிங்க்’ படத்தின் ரீமேக் ஆக ‘நேர்கொண்ட பார்வை’ தமிழில் உருவானது. இதனை  ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய வினோத் இயக்கினார். ‘பிங்க்’ படத்தில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் குமார் நடித்துள்ளார். 

பெண் உரிமையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் கடந்த 8ம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. நான்கு நாட்களாக திரையரங்குகளில் கூட்டம் நிரம்பியது. நேற்றும் இன்றும் வார விடுமுறை என்பதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வெளியான முதல் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.30 கோடி வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தமிழக விநியோகஸ்தர் ராகுல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் படத்தின் வெளிநாட்டு வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நேர்கொண்ட பார்வை அனைத்து சாதனைகளையும் தகர்த்துள்ளது. வெளிநாட்டு வசூலில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை நேர்கொண்ட பார்வை இதுவரை வசூல் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.