சினிமா

ஆகஸ்ட் 8ல் வெளியாகிறது அஜித்தின் நேர்கொண்ட பார்வை

webteam

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், டாப்ஸி நடித்த இந்தி படமான, ‘பிங்க்’  ‘நேர்கொண்ட பார்வை’என்ற தலைப்பில் தமிழில் ரீமேக் ஆகிறது. அமிதாப் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் அஜித்குமார் நடிக்கிறார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லிகணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்

இதை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்

இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. சமீபத்தில் 'வானில் இருள்' என்ற பாடலின் பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான அந்தப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர், மற்றொரு பாடலும் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்தப் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்தது. அது என்ன அறிவிப்பு என்று அஜித் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருந்தனர். அதன்படி இன்று மாலை படத்தின் வெளியீடு குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.