சினிமா

அமீரின் ‘நாற்காலி’ பட ஷூட்டிங் முடிந்தது – கோடையில் வெளியீடு!

sharpana

வி.இசட் துரை இயக்கத்தில் அமீர் நடித்துள்ள நாற்காலி படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு அஜித், ஜோதிகா நடிப்பில் வெளியான ‘முகவரி’ படத்தின் மூலம் இயக்குநரானார் வி.இசட் துரை. அதற்கடுத்ததாக, தொட்டி ஜெயா, நேபாளி படங்கள் மூலம் கவனம் ஈர்த்தார். இவரது இயக்கத்தில் கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் ‘இருட்டு’ படத்தை இயக்கியிருந்தார்.

இவரது இயக்கத்தில, இயக்குநர் அமீர் நடித்திருந்த ‘நாற்காலி’ படம் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு சிக்கல்களால் ஷூட்டிகில் இருந்து வந்தது. தற்போது படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ளது. படத்தின் படத்தொகுப்பும், இசைக்கோர்ப்பும் நடைபெற்று வருகிறது.