சினிமா

மணிரத்னம் படத்தில் மாடல் அழகி தயானா எரப்பா

webteam

மனிரத்னம் இயக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் மாடல் அழகி ஒருவர் புதியதாக இணைந்துள்ளார்.

மணிரத்னம் இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘செக்கச்சிவந்த வானம்’. முதன்முறையாக பல நட்சத்திரங்களை வைத்து படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இதில் விஜய்சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா என பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரின் காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டுவிட்டன. விஜய்சேதுபதியின் பகுதியும் சிம்புவின் பகுதியும் நடைப்பெற்று வருகின்றன. 

இடையில் ஜோதிகாவின் காட்சிகளையும் இயக்குநர் படமாக்கி வந்தார். துபாயில் தற்சமயம் படப்பிடிப்பு நடைப்பெற்று வரும் இந்நிலையில் இப்படத்தில் புதியதாக மாடல் உலகின் நட்சத்திரமான தயானா எரப்பா இணைந்துள்ளார். இவர் மிஸ் இந்தியா போட்டியில் ஃபைனலிஸ்ட் ஆக வந்தவர். இவர் முதன்முறையாக தமிழில் அறிமுகமாக உள்ளார். இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.