சினிமா

மணிரத்னம் படத்தில் நடிக்க போகிறாரா ஆரவ்?

webteam

மணிரத்னம் இயக்க உள்ள புதிய படத்தில் ஆரவ் நடிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. 

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவர் நைட்டில் உச்சத்திற்குப் போனவர் ஆரவ். இவர் நடிகர், மாடல் என பல தளங்களில் இயங்கி வந்தவர். ஓவியாவுக்கும் இவருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மெலிதான காதல் மலர்ந்தது. பிறகு அது பிரேக் அப் ஆனது. அதனால் ஓவியா நிகழ்ச்சியை விட்டு பாதியில் வெளியேறினார். இந்தப் பிரபலத்தால் இருவருக்கும் சினிமா உலகில் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. 
இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி இருவரும் ஆரவை தங்களது வீட்டுக்கு அழைத்து சந்தித்துள்ளனர். ஆரவ் தனது ப்ளாக் பக்கத்தில் சந்திப்புக்கான புகைப்படத்தை வெளியிட்டு, ’’எதிர்பாக்காத முதல் வாழ்த்து. இயக்குநர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி என்னை வீட்டுக்கு அழைத்திருந்தார்கள். அதற்கு நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின் மூலம் ஆரவ் மணிரத்னம் படத்தில் விரைவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.