சினிமா

போதைப் பொருட்கள் சர்ச்சை: விசாரணை வளையத்திற்குள் கன்னட சினிமாவின் நட்சத்திர தம்பதி

jagadeesh

போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் நட்சத்திர தம்பதியான திக்காந்த், அன்ட்ரிதா ராய் ஆகிய இருவரும் பெங்களூருவில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

கன்னட திரையுலகின் 13 நட்சத்திரங்களுக்கு போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் சாண்டல்வுட்டின் நட்சத்திர தம்பதியான திக்காந்த், அண்ட்ரிதா ராய் ஆகிய இருவரும் நடத்திய விருந்தில், போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து இருவரும் பெங்களூருவில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.