சினிமா

”நான் நடித்த படங்களின் எந்த இயக்குநரும் எனக்கு மரியாதை தந்ததில்லை” - கங்கனா கண்ணீர்

”நான் நடித்த படங்களின் எந்த இயக்குநரும் எனக்கு மரியாதை தந்ததில்லை” - கங்கனா கண்ணீர்

webteam

சென்னையில் தலைவி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை கங்கனா ரணாவத் கண்ணீர் மல்க பேசினார்.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமான தலைவி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவான தலைவி படம் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கங்னா ரனாவத், அரவிந்த்சாமி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்குனர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.  விழாவில் பேசிய கங்னா தலைவி திரைப்படத்திற்காக முதலில் தன்னை அணுகியபோது முதலில் நடிக்க தயங்கியதாகவும் பிறகு இயக்குனர் விஜய் தன்னை ஒப்புக் கொள்ள வைத்ததாகவும் தெரிவித்தார். மேலும் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்திற்கு அரவிந்த்சாமி மாதிரியான ஒரு ஹீரோ அளித்த ஒத்துழைப்பு முக்கியமானது என குறிப்பிட்டார்.

அதோடு பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தனக்கு கொடுக்கப்பட்டது இல்லை எனவும் தலைவி படத்தில் இயக்குனர் விஜய் தன்னை மரியாதையுடன் நடத்தியதாகவும் குறிப்பிட்டு மேடையிலேயே கண் கலங்கினார்.