சினிமா

"தளராத தன்முனைப்பினால் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் கே.வி.ஆனந்த்" - கமல் புகழஞ்சலி

webteam

இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி." எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், நடிகைகள் குஷ்பு, ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.