சினிமா

எஸ்.ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘கடமையை செய்’!

எஸ்.ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘கடமையை செய்’!

sharpana

எஸ்.ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த்  நடிக்கும் ‘கடமையை செய்’ படத்தின் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன.

’வாலி’, ’குஷி’ மூலம் அஜித், விஜய்க்கு சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த எஸ்.ஜே சூயார் ‘நியூ’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, ’அன்பே, ஆருயிரே’, ’கள்வனின் காதலி’, ’நியூட்டனின் மூன்றாம் விதி’, ’மெர்சல்’, ’ஸ்பைடர்’ என ஹீரோ, வில்லன் கேரக்டர்களில் மிரட்டி வந்தவர், தற்போது ஹீரோ கேரக்டரிலேயே கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ’மான்ஸ்டர்’ விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றதால், இந்த முடிவை எடுத்துள்ளார்.

தற்போது, ’மாநாடு’, ’பொம்மை’ படங்களில் நடித்து வருபவர் அடுத்ததாக ’கடைமையை செய்’ படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ’பிக்பாஸ்’ புகழ் யாஷிகா ஆனந்த் நடிக்கிறார்.

கடந்த 2016 ஆம ஆண்டு சுந்தர் சி நடிப்பில் வெளியான ‘முத்தின கத்தரிகாய்’ படத்தை இயக்கிய வேங்கட் ராகவன் தான் இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில், இன்று தனது ‘கடமையை செய்’ படத்தின் ஷூட்டிங் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார், எஸ்.ஜே சூர்யா.