சினிமா

பொன்னியின் செல்வன்: ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய் காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் நிறைவு

PT WEB

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெறும் ஜெயம்ரவி மற்றும் ஐஸ்வர்யா ராய்கான காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்தன. குவாலியரில் நடைபெற்று வரும் பொன்னியின் செல்வன் திரைப்பட படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரம் வரை நடைபெறுகிறது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். குறிப்பாக ஜெயம் ரவி அருண்மொழிவர்மனாக நடிக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது.

அந்த இரண்டு படங்களில் இடம்பெறும் ஜெயம் ரவியின் காட்சிகள் நிறைவடைந்துள்ளன. இதை ஜெயம் ரவி அதிகாரப் பூர்வமாகவும் அறிவித்திருக்கிறார். அதேபோல் ஐஸ்வர்யா ராய்கான காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டனமேலும் மற்ற நடிகர்களின் காட்சியும் ஓரிரு வாரங்களில் முடிவடைந்து விடும் என கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் பட்டப்படிப்பை முடித்துள்ள ஜெயம் ரவி, விரைவில் பூலோகம் கல்யாண் இயக்கும் படத்தில் இணைகிறார்.