சினிமா

மீண்டும் தாய்லாந்து போகும் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படக்குழு

மீண்டும் தாய்லாந்து போகும் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படக்குழு

webteam

‘ஹரஹர மஹாதேவகி’ வெற்றிக்குப் பிறகு நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் இருட்டு அரையில் முரட்டுக்குத்து. இதன் படப்பிடிப்பு விரைவில் தாய்லாந்தில் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் சர்வர் சுந்தரம் மற்றும் சக்கப்போடு போடு ராஜா படத்தில் நடித்த வைபவி ஷாண்டில்யா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்திரிகா ரவி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். சந்திரிகா இந்தப் படத்தில் பேயாக வருகிறார். யாஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தாய்லாந்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சமீபத்தில்தான் சென்னைக்கு திரும்பியது. தற்போது சென்னையில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தாய்லாந்திற்கு இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக இக்குழு செல்ல உள்ளது.

இந்தப் படத்தில் மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா, மீசைய முறுக்கு புகழ் ஷா ரா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலமுரளி பாலு இசையமைக்கிறார். தருண் பாலாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். 2018ஆம் ஆண்டு துவக்கத்திலேயே இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.