சினிமா

‘எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு நானா படேகர் தான் காரணம்’- தனுஸ்ரீ தத்தா இன்ஸ்டாவில் பதிவு

webteam

பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா, தனக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு, நடிகர் நானா படேகரே பொறுப்பு என குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்ஸ்ட்ராகிராமில் இத்தகவலை பதிவிட்டுள்ள அவர், நானா படேகரும் பாலிவுட் மாஃபியா கும்பலும் தமது நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் யார் பெயரெல்லாம் வெளியானதோ, அவர்கள்தான் பாலிவுட் மாஃபியா என்றும் விளக்கமளித்துள்ளார். நானா படேகரின் படங்களை மக்கள் யாரும் பார்க்க வேண்டாம் எனவும் நடிகை தனுஸ்ரீ தத்தா கேட்டுக்கொண்டுள்ளார்.