சினிமா

”’மாநாடு’ படத்தின் வெற்றி சந்தோஷம் கொடுக்கிறது” - மோகன்லால் நெகிழ்ச்சி

sharpana

’மாநாடு’ வெற்றியடைந்தது சந்தோஷமாக உள்ளது என்று உற்சாகமுடன் கூறியிருக்கிறார், நடிகர் மோகன்லால்.

’ஈஸ்வரன்’ படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். பல்வேறு தடைகளையும் நெருக்கடிகளையும் கடந்து ‘மாநாடு’ கடந்த 25 ஆம் தேதி வெளியானது. எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் வெளியாகாமல் ஒர்க்கிங் நாளில் வெளியாகியே படம் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. வெற்றிப் படமாக அமைந்துள்ளதாக இதுவரை வெளியான விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. திரைபிரபலங்கள் அனைவரும் ‘மாநாடு’ பார்த்துவிட்டு பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், ‘மாநாடு’ வெற்றியடைந்திருப்பது சந்தோஷமாக உள்ளது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் மலையாள நடிகர் மோகன்லால். இதனை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மோகன்லால் நடிப்பில் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படம் நாளை தியேட்டர்களில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.