சினிமா

“மணிரத்னத்தின் கதாநாயகியாக இருக்கவே விருப்பம்” - அதிதி ராவ்

webteam

நான் எப்போதும் மணிரத்னத்தின் கதாநாயகியாகவே இருக்க விரும்புகிறேன் என்று அதிதி ராவ் ஹைதாரி கூறியிருக்கிறார்.

2006 ‘ப்ரஜாபதி’ படத்தின் மூலம் தன் சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் அதிதி ராவ் ஹைதாரி . இவர் ஏற்கெனவே மணிரத்னத்தின் ‘காற்றுவெளியிடை’ படத்தில் நடித்திருந்தார். இப்போது மீண்டும் ‘செக்கச்சிவந்த வானம்’ மூலம் மணிரத்னம் படத்தில் இணைந்துள்ளார். இரண்டாவது முறையாக இவரை மணிரத்னம் தன் படத்திற்கு தேர்வு செய்திருக்கிறார். ஆகவே அதிதி மேல் சினிமாதுறையினரின் பார்வை பலமாக விழுந்துள்ளது. 

அதிதி; ஒமுங் குமார், சஞ்சய் லீலா பன்சாலி போன்றவர்களுடன் இணைந்து பாலிவுட்டில் பணியாற்றியவர். மேலும் மலையாளம், தெலுங்கு, மராத்தி படங்களிலும் நடித்துள்ளார்.  மிகச் சிறந்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியதை பற்றி இவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். “நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். ஏனென்றால் சிலரை தெரியாமல் இருந்திருந்தால் சினிமா துறைக்கு வந்திருக்க முடியாது. 

நான் என்னை வளர்த்துக் கொள்வதற்காக நிறைய படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தக் கனவு இன்று வந்ததல்ல; சின்ன வயதில் இருந்தே மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்று கனவு இருந்தது. நான் மணி சாரின் ‘பாம்பே’ படத்தை பார்த்திருக்கிறேன்.  மணிரத்னத்தின் கதாநாயகியாக வேண்டும் என நான் அப்போதே விரும்பினேன். என்னை பாதித்த, நான் மதிக்கக் கூடிய பல இயக்குநர்களுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என நோக்கம் இருந்தது” என்கிறார் அதிதி.