சினிமா

2 ஹீரோ கதை: இறுதிகட்ட ஸ்கிரிப்ட் பணியில் ராஜமவுலி!

webteam

பாகுபலி-க்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படத்தில் இரண்டு ஹீரோ நடிக்கின்றனர். கதைக்கான கடைசி கட்ட வேலைகள் நடந்து வருகிறது.

ராஜமவுலி படங்களுக்கு அவரது அப்பாவும் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் கதை எழுதுவது வழக்கம். அவர் முதலில் எழுதிவிட்டு ராஜமவுலியிடம் கொடுப்பார். அவர் அதில் திருந்தங்கள் இருந்தால் சொல்லுவார். இல்லை என்றால் மேலும் அதை மெருகூட்டுவார். அதற்குப் பிறகு வசனம் எழுத்தப்படும். இதுதான் வழக்கம். 

பாகுபலி-க்கு பிறகு ராஜமவுலிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் அடுத்த கதையை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் அப்பாவும் மகனும். 
‘அடுத்த படத்தில் இரண்டு ஹீரோ நடிக்கின்றனர். கதை தயாராகிவிட்டது. ஃபைனல் டச்சில் ராஜமவுலி இருக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா ஹீரோக்களாக நடிக்கின்றனர். அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்தை அடுத்து மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார் ராஜமவுலி’ என்று அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே எனது அடுத்த படத்தை டிவிவி தானய்யா தயாரிப்பார் என்று கூறியிருந்தார் ராஜமவுலி.