சினிமா

பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் காலமானார்

JustinDurai

பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 61.

2001-ஆம் ஆண்டு ஐ.வி சசி இயக்கிய ‘ஈ நாடு இன்னலே வரே’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கோட்டயம் பிரதீப் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். 2010-ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, ‘ராஜா ராணி,’ 'நண்பேன்டா', 'தெறி' உள்ளிட்ட திரைப்படங்களிலும் கோட்டயம் பிரதீப் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு கேரள திரையுலகத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: 'இறை அருளுக்கு நன்றி' - இளையராஜாவுடன் கங்கை அமரன் சந்திப்பு