சினிமா

’சூர்யா 40’ படம் குறித்த வதந்திகளை நம்பவேண்டாம்: இயக்குநர் பாண்டிராஜ் வேண்டுகோள்!

sharpana

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 40’ படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தில் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார் என்றும் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்றும்  தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது.

இத்தகவலை, மறுத்துள்ள இயக்குநர் பாண்டிராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில்,    “நண்பர்களே, சூர்யா 40 பற்றிய உங்கள் ஆர்வத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். தயவு செய்து வதந்திகளை நம்பவேண்டாம். தயாரிப்பு நிறுவனம் விரைவில் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை அறிவிக்கும். நாங்களும் உங்களுக்கு சிறந்த படத்தைக் கொடுக்க கடுமையாக உழைக்கிறோம்” என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.  கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தை சூர்யா நடித்ததோடு தயாரிக்கவும் செய்தார்.

அதோடு, கடந்த 2018 ஆம் ஆண்டு சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை பாண்டிராஜ் இயக்கினார். அந்த ஆண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்றாக மாறியது.

இந்நிலையில்தான், தற்போது சூர்யாவின் பெயரிடப்படாத ’சூர்யா40’ படத்தை இயக்கவிருக்கிறார்.