சினிமா

இவ்ளோ வரியா? தமிழ் சினிமாவை காப்பாற்ற ஷங்கர் வேண்டுகோள்!

இவ்ளோ வரியா? தமிழ் சினிமாவை காப்பாற்ற ஷங்கர் வேண்டுகோள்!

webteam


சினிமாவுக்கு அதிகப்பட்சமாக 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி, திரையுலகினர் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த வரி விதிப்பு அதிகமானது என பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார். இதுபற்றி அவர், 
’48-58 சதவிகிதம் வரியா? இது அதிகபட்சமானது. தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்’ என்று கூறியுள்ளார்.