சினிமா

அமிர்தசரஸில் தொடங்கிய ஷங்கர் - ராம் சரண் படப்பிடிப்பு - ரிலீஸ் எப்போது தெரியுமா?

sharpana

ஷங்கர் இயக்கும் ‘ராம் சரண் 15’ படப்பிடிப்பு அமிர்தசரஸில் துவங்கியுள்ளது.

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை முடித்தவுடன் இயக்குநர் ஷங்கரின் ‘ராம் சரண் 15’ படத்தில் நடித்து வருகிறார் ராம் சரண். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில், நாயகியாக கியாரா அத்வானி நடிக்க தமன் இசையமைக்கிறார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்திற்கு, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். வரும் ஏப்ரல் - 9 ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்று ‘ராம் சரண் 15’ படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு பஞ்சாம் மாநிலம் அமிர்தசரஸில் தொடங்கியுள்ளது. அங்குள்ள கல்சா கல்லூரியில் கல்லூரி தொடர்பான காட்சிகள் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதிவரை படமாக்கப்படவுள்ளன. இதில், பங்கேற்க ராம் சரண் விமான நிலையம் வந்தடைந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

வரும் ஜூலையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து அடுத்த ஆண்டு 2023 கோடையில் ‘ராம் சரண் 15’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தினை முடித்துவிட்டு, ’ஜெர்ஸி’ மூலம் கவனம் ஈர்த்த கெளதம் தின்னனுரி இயக்கத்தில் ‘ராம் சரண் 16’ படத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் துபாயில்  படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் ராம் சரண்.