சினிமா

ஹரியுடன் இணையும் ஜெயம் ரவி?

sharpana

இயக்குநர் ஹரி - ஜெயம் ரவி இணைகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஹரி அருண் விஜய்யை வைத்து ‘யானை’ படத்தை இயக்கி முடித்துள்ளார். யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து. வரும் ஜூன் 17 ஆம் தேதி ‘யானை’ வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் ஹரி நடிகர் ஜெயம் ரவிக்கு கதை சொல்லியதாகவும் அடுத்ததாக ஜெயம் ரவி ஹரி இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் ’பொன்னியின் செல்வன்’, ‘அகிலன்’ வெளியாகவுள்ளது. அகமது இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களை முடித்தப்பிறகு ஹரியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த ‘அருவா’ எப்போதுவேண்டுமென்றாலும் தொடங்கப்படலாம் என்று ஹரி கூறியுள்ளார்.