சினிமா

முதல் திருமணத்தை மறைத்த திலீப்: மஞ்சுவாரியர், காவ்யா மாதவன் அதிர்ச்சி!

webteam

பாலியல் வழக்கில் சிக்கியுள்ள மலையாள நடிகர் திலீப் விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியர் அவரின் முதல் மனைவியல்ல என்கிற அதிர்ச்சித்தகவல் வெளியாகி இருக்கிறது. 
நடிகை மஞ்சுவாரியரை திருமணம் செய்த நடிகர் திலீப் அவரை விவாகரத்து செய்து விட்டு நடிகை காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். 
ஆனால், மஞ்சுவாரியருக்கு முன்பே தனது உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக மலையாள ஊடங்கள் புகைப்பட ஆதரங்களுடன் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்தத் தகவலை நடிகையின் பாலியல் வழக்கு தொடர்பான விசாரணையின் போது திலீப் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. திலீப் திறைத்துறைக்கு வருவதற்கு முன் தூரத்து உறவுப்பெண்ணை 1990ம் ஆண்டு அலுவாவில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது அந்தப்பெண் வளைகுடா நாட்டில் வாழ்ந்து வருவதாக  திலீப் தெரிவித்துள்ளார். திரைத்துறைக்கு வந்து பிரபலமான பிறகு 1998ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி மஞ்சுவாரியரை திருமணம் செய்து கொண்டுள்ளார். 
அதன்பிறகு மஞ்சுவாரியரை விவாகரத்து செய்த திலீப் 2015ம் ஆண்டு நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார். திலீப்- மஞ்சுவாரியருக்கு பிறந்த மகள் மீனாட்சி தந்தையுடன் தற்போது வசித்து வருகிறார். திலீப் தனது உறவுக்காரப் பெண்ணை முதல் திருமணம் செய்து கொண்ட விவரத்தை மஞ்சுவரியரிடமும், காவ்யா மாதவனிடம் மறைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.