சினிமா

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்?

sharpana

செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் ’சாணிக் காயிதம்’ படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய விருதை வென்ற ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் உதவி இயக்குநராகவும், நடிகை ரித்திகா சிங்கிற்கு சிறப்பு தேசிய விருது கிடைத்த சுதா கொங்கராவின் ‘இறுதிச்சுற்று’ படத்தில் டயலாக் போர்ஷனை எழுதிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தற்போது, செல்வராகவனையும் கீர்த்தி சுரேஷையும் வைத்து ‘சாணிக் காயிதம்’ படத்தை இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் ‘ராக்கி’ என்ற படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதன் ட்ரைலர் பாராட்டுக்களை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சாணிக் காயிதம் படத்தை முடித்தப் பிறகும், ’ராட்சசன்’ பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் முடிந்த பிறகும், நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அருண் மாதேஸ்வரன் சொன்ன ஒன்லைன் தனுஷை ஈர்த்ததாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.