சினிமா

மாமனாரின் ‘தர்பார்’ உடன்  மோதும் மருமகன் தனுஷின் ‘பட்டாஸ்’ ?

webteam

தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘பட்டாஸ்’ படமும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர உள்ள ‘தர்பார்’ படமும் ஒரே சமயத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் போதே பொங்கல் அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்கள் முன்புதான் முற்றிலுமாக முடிவடைந்தது. இப்போது படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. 

தனுஷ் நடிப்பில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி வரும் படம் ‘பட்டாஸ்’. இப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி கிட்டதட்ட முடிவடைந்தது. இதனை அடுத்து தனுஷை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்திற்கான பணிகள் லண்டனில் நடைபெற்று வந்தன. அப்பணிகள் முடிவடைந்த நிலையில், மீண்டும் ‘பட்டாஸ்’ படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தெரிகிறது. இதன் வேலைகள் முடிந்த கையோடு படத்தினை வரும் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியிட சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படி திட்டமிட்டபடி வெளியானால் மருமகன் தனுஷின் ‘பட்டாஸ்’ படமும் மாமனார் ரஜினியின் ‘தர்பார்’படமும் ஒரே நாளில் திரைக்கு வரும். இதன் மூலம் தனுஷ் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் ஒரே சமயத்தில் மிகுந்த உற்சாக கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் ரஜினி நடித்த ‘பேட்ட’ படமும் சத்ய ஜோதி தயாரிப்பில் உருவான அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்றே வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.