சினிமா

தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்பு அமைப்பு சம்மன்

webteam

நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளுக்கு போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது.

பாலிவுட் பிரபலங்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்ற விவகாரம் பூதாகரமாக உருவெடுத்திருக்கிறது. குறிப்பாக மரணமடைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு அவரது காதலி ரியா போதைப்பொருள் வாங்கி க்கொடுத்தார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மேலும் பல பிரபலங்களும் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப்பொருள் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.