சினிமா

மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்திற்கு கொரோனா உறுதி; நேரடியாக தகனம் செய்ய ஏற்பாடு

webteam

மறைந்த பிரபல திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்திற்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

கே.வி.ஆனந்திற்கும் அவரின் வீட்டில் இருந்த சிலருக்கும் கொரோனா தொற்று இருந்துள்ளது. அதனைத்தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி கே.வி.ஆனந்த் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், பிறர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டதாக சொல்லப்படுகிறது. அதனைத்தொடர்ந்து இன்று காலை 3 மணி அளவில் கே.வி.ஆனந்த் காலமானார். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவரது உடல்நேரடியாக பெசன்ட்  நகர் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. 

முன்னதாக, அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய 54 வயதான கே.வி. ஆனந்த், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.