சினிமா

பைரவா புகார் எண் செயல்படாததால் நீதிபதி அதிர்ச்சி

webteam

பைரவா படம் தொடர்பான வழக்கில் கூடுதல் கட்டண வசூல் குறித்து புகார் தெரிவிக்க அளிக்கப்பட்ட போன் எண் செயல்படாததால் நீதிபதி அதிர்ச்சியடைந்துள்ளார்.

விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிடபட்டிருக்கும் படம் பைரவா. இப் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை ‌எடுக்க வேண்டும் என்று தேவராஜ் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இது குறித்த வழக்கில் பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் மணிசங்கர் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் தெரிவிக்க மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றிற்கான தொலைபேசி எண்கள் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பைரவா திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்களைத் தெரிவிக்க ‌அமைக்க‌ப்பட்டுள்ள குழுக்களின் புகார் போன் எண் செயல்படாததால் நீதிபதி அதிர்ச்சியடைதுள்ளார்.