சினிமா

அசோக் செல்வனுக்கு ஜோடியாகும் ‘சூரரைப் போற்று’ அபர்ணா பாலமுரளி

sharpana

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

‘வான்’ இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வனின் புதிய பட அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது. இப்படத்தில், மூன்று முன்னணி நாயகிகளுடன் ஹீரோவாக நடிக்கிறார் அசோக் செல்வன். அசோக் செல்வன் நடிப்பில் கடைசியாக ’தீனி’ படம் வெளியானது.

கடந்த ஆண்டு வெளியான ‘ஓ மை கடவுளே’ வெற்றிக்குப்பிறகு, அசோக் செல்வன் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் கூடின. இந்த நிலையில், இன்று வெளியாகியிருக்கும் அசோக் செல்வனின் புதிய படத்தில் மூன்று பிரபல கதாநாயகிகள் நடிப்பதால் இன்னும் எதிர்ப்பார்ப்புகள் எகிறியுள்ளன.

‘சூரரை போற்று’ அபர்ணா பாலமுரளி, ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ ரித்து வர்மா, தெலுங்கு நடிகர் ராஜசேகர் - ஜீவிதா தம்பதிகளின் மகள் சிவாத்மிகா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.