சினிமா

சினேகா-வெங்கட் பிரபு- யோகி பாபு இணையும் ‘ஷாட் பூட் த்ரீ'’

sharpana

’அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகை சினேகா - இயக்குநர் வெங்கட் பிரபு இணைந்துள்ளனர்.

பிரசன்னா-சினேகா நடித்த ’அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அர்ஜுன் நடிப்பில் ’நிபுணன்’, மோகன்லால் நடித்த ’பெருச்சாழி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், விஜய் சேதுபதியின் ’சீதக்காதி’ படத்தின் இணை தயாரிப்பாளருமான அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் தற்போது சினேகா- வெங்கட் பிரபு இணைந்துள்ளனர். இப்படத்திற்கு ‘ஷாட் பூட் த்ரீ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் பூவையார், பிரபல பாடகி பிரணிதி, நடனக் கலைஞர் கைலாஷ் ஹீத் மற்றும் புதுமுகம் வேதாந்த் ஆகியோர் மைய வேடங்களில் நடிக்கின்றனர். நான்கு குழந்தைகளை சுற்றிய கதையான ஷாட் பூட் த்ரீ-யின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறை கொண்டாட்டமாக இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படம் குறித்து அருண் வைத்யநாதன் பேசும்போது,

”கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் தான் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளாரகள். ஓடிடி தளங்களிலும் கூட குழந்தைகளை கவரும் வகையில் படங்கள் வரவில்லை. இந்தப் படத்தின் கதையை ஆனந்த் ராகவ்வுடன் இணைந்து கொரோனாவுக்கு முன்னரே நான் எழுதி விட்டாலும், அதை எடுப்பதற்கு இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட உள்ளோம்.

இதன் கதை சென்னையில் நடைபெற்றாலும், உலகத்தில் உள்ள எந்த குழந்தையும் இதை தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். தயாரிப்பு ரீதியாகவும் படத்தின் குழுவிலும் நிறைய புதுமைகளை புகுத்தி உள்ளோம். நீண்ட இடைவெளிக்கு பிறகு சினேகாவுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. வெங்கட் பிரபுவை இயக்குவது ஜாலியான அனுபவம். யோகி பாபு தனது தனித்துவ பாணியில் படத்திற்கு மெருகு சேர்க்கிறார். குழந்தை நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாக நடித்து வருகின்றனர்” என்றார்.