சினிமா

வெள்ளிக்கிழமை எப்போது வரும்: எமிஜாக்சன் ஏக்கம்

webteam

வெள்ளிக்கிழமை எப்போது வரும் என்று நடிகை எமி ஜாக்சன் ட்விட்டர் பக்கத்தில் தனது ஏக்கத்தை தெரிவித்துள்ளார். 

ரஜினி நடிப்பில் வெளிவர உள்ள 2.ஓ படத்தின் இசை வெளியிட்டு விழா துபாயில் நடைபெற உள்ளது. அதில் ஷங்கர், ரஜினி, அக்‌ஷை குமார், நிரவ்ஷா என பலர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த விழா பற்றிய ஏக்கத்தில் இருக்கிறார் எமிஜாக்சன். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்  ”நான் இப்பவே ஒவ்வொரு நிமிடத்தையும் எண்ண தொடங்கிவிட்டேன். துபாயில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரியை காண ஆர்வமாக உள்ளது. எப்போது வெள்ளிக்கிழமை வரும் என காத்திருக்கிறேன்” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.