சினிமா

ஏதோ தப்பா படுது ! - ஸ்ரீதேவி மறைவுக்கு முன் அமிதாபின் ட்வீட்

ஸ்ரீதேவி மறைவுக்கு முன் அமிதாப் பச்சன் பதிந்த ட்வீட் இப்போது சமூக வளைத்தலத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு துபாயில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனையடுத்து இந்திய திரையுலகைச் சேர்ந்த அனைவரும் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீதேவி மரணமடைவதற்கு முன் இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பதிவிட்டிருந்த ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது. ஸ்ரீதேவி மறைவுச் செய்தி இந்திய நேரப்படி 3 மணியளவில்தான் ஊடகங்களில் வெளியானது. ஆனால் நேற்றிரவு 1.15 மணியளவில் நடிகர் அமிதாப் பச்சன் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘ஏதோ தப்பாப்படுது.. வித்தியாசமான பதட்டம் நிலவுகிறது.. ஏன் என்று தெரியவில்லை’ என்று இந்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் ட்வீட் செய்த அடுத்த சில நிமிடங்களில் ஸ்ரீதேவி மறைவு செய்தி வெளியானது. இதனையடுத்து அமிதாப் பச்சனின் ட்விட்டர் பதிவை நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.  ஸ்ரீதேவியின் மறைவுப் பற்றி அமிதாப் பச்சனின் ஆறாம் உணர்வுக்கு முன்பே தெரிந்திருக்கிறது என்றும் , இதை நம்பவே முடியவில்லை என்று நெட்டிசன்ஸ் ரீட்வீட் செய்து வருகின்றனர்.