சினிமா

லைகா தயாரிப்பில் தெலுங்கு படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

sharpana

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தெலுங்கு திரைப்படத்தை இயக்குகிறார். 

தமிழில் '3', 'வை ராஜா வை' ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்தப் படங்களுக்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட ஐஸ்வர்யா, தற்போது மீண்டும் திரைப்படத்தை இயக்குகிறார்.  ஆனால்,இந்த முறை தெலுங்கு திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். அத்துடன், அவர் இயக்கும் புதிய திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

தமிழ் சினிமாவின் பல பிரமாண்ட திரைப்படங்களை தயாரித்த லைகா தற்போது தெலுங்கு திரையுலகில் கால் பதிக்கிறது. அதில் முதல் கட்டமாகவே ஐஸ்வர்யா இயக்கும் படத்தை அந்த நிறுவனம் தயாரிக்கிறது. ஐஸ்வர்யா இயக்கவுள்ள இந்தப் படத்திற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் நடிகர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.