சினிமா

“எனது அடுத்தப்படம் காதல்கள் குறித்து பேசும் ‘நட்சத்திரம் நகர்கிறது’”: இயக்குநர் பா.ரஞ்சித்

sharpana

’அட்டக்கத்தி’ மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பா.ரஞ்சித் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ என்ற நான்கு படங்களே இயக்கி இருந்தாலும் அவரது படங்கள் சமூகத்தில் பெரிய தாக்கத்தையும் விவாதத்திற்குரியதாகவும் மற்றியுள்ளன. தற்போது, அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சார்பட்டா பரம்பரை’ வரும் ஜூலை 22 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. அதேசமயம், ‘ரைட்டர்’, ’குதிரை வால்’, துருவ் விக்ரமின் பெயரிடாதப்படம் உள்ளிட்டப் படங்களையும் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில், ஃபிலிம் கம்பானியன் ஊடகம் பா.ரஞ்சித்துடன் நடத்திய நேர்காணலில் ’உங்கள் அடுத்தப் படம் என்ன?’ என்ற கேள்விக்கு, “ ’நட்சத்திரம் நகர்கிறது’என்ற படத்தை இயக்குகிறேன். அது காதல்களைப் பற்றியப் படம். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களிலும் ஏற்படக்கூடிய காதலைக் குறித்து பேசப்போகிறது” என்று உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘அட்டக்கத்தி’ படத்தில் இளம் பருவத்தில் ஏற்படும் காதல்களை அழகியலோடு காட்டி ரசிக்க வைத்தார் பா. ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.