சினிமா

’செக்க சிவந்த வானம்’ படத்தில் சர்ச்சை வசனம்? - மணிரத்னம் அலுவலகத்துக்கு மிரட்டல்

rajakannan

விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு என பல நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதனை மணிரத்னம் இயக்கி உள்ளார். கடந்த வியாழக்கிழமை வெளியான இந்தப் படம், 5 நாட்களாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சென்னை அபி்ராமபுரத்தில் உள்ள திரைப்பட இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்துக்கு மர்ம நபர் ஒருவர் நேற்றிரவு தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார்.

செக்க சிவந்த வானம் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கவில்லை என்றால் விபரீதமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் தொலைபேசியில் மிரட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். படத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வசனம் இடம் பெற்றுள்ளதாக கூறி அந்த நபர் பேசியுள்ளார்.

மிரட்டலை அடுத்து மணிரத்னம் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மணிரத்னம் தற்போது அலுவலகத்தில் இல்லாத நிலையில், அவரது அலுவலக ஊழியர்களிடம் நடந்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.