சினிமா

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் லட்சுமி மேனன்

webteam
நீண்ட இடைவெளிக்குப் பிறகு லட்சுமி மேனன் மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
குட்டி புலி, கொம்பன், மருது ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையா அடுத்து ரெதான் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். அந்தப் படத்தில் கவுதம் கார்த்தி ஹீரோவாக நடிக்க லட்சுமி மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் இறுதியாக மிருதன் படத்தில் நடித்திருந்தார். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தப் படங்களிலும் நடிக்காமல் இருந்த லட்சுமி மேனன் தற்போது மீண்டும் முத்தையா படத்தில் நடிக்கிறார். 
இவர் ஏற்கனவே குட்டி புலி, கொம்பன் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக முத்தையா படத்தில் நடிப்பதுடன் தமிழ் சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குகிறார். கவுதம் கார்த்தி - லட்சுமி மேனன் - முத்தையா கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தின் பூஜை விரைவில் நடைபெறவுள்ளது. மேலும் கொரோனா அச்சம் நீங்கிய பிறகு படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.