சினிமா

நயன்தாரா.. கீர்த்தி சுரேஷ் பாணியை பின்பற்றும் நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத்

sharpana

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இரண்டு படங்களில் நடிக்கவிருக்கிரார் நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத்.

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘மாயா’ வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்து ‘இமைக்கா நொடிகள்’, ’டோரா’, ’கொலையுதிர் காலம்’, ‘நெற்றிக்கண்’ என நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. நடிகை கீர்த்தி சுரேஷும் ‘மகாநடி’, ‘பென்குயின்’, ‘மிஸ் இந்தியா’, ‘குட் லக் சகி’ உள்ளிட்ட நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். அதேபாணியை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் பின்பற்றி வருகிறார். அவரது நடிப்பில் ’கனா’ வெளியான நிலையில், நாளை ‘திட்டம் இரண்டு’ வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத்tத்தும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கவுள்ளார்.

’இவன் தந்திரன்’, ’விக்ரம் வேதா’,’மாறா’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஷ்ரதா ஸ்ரீநாத் தற்போது தமிழ் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இரண்டு திரைப்படங்களில் அவர் நடிக்கவுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்துள்ளன. அதில் தமிழில் உருவாகும் ஒரு திரைப்படத்தை எஸ்.ஆர்.பிரபுவும், மற்றொரு படத்தை தெலுங்கு தயாரிப்பாளரும் தயாரிக்க உள்ளனர். இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.