சினிமா

கார்த்தியின் புதிய படத்தில் இணையும் சமந்தா?

sharpana

நடிகர் கார்த்தியின் புதிய படத்தில் நடிகை சமந்தா நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

‘விருமன்’, ‘சர்தார்’ படங்களில் நடித்துவரும் கார்த்தி ‘பேச்சிலர்’ இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கவிருக்கிறார். ஜி.வி பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பேச்சிலர்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில், சதீஷ் செல்வக்குமாருக்கு தனது அடுத்தப் படத்தின் வாய்ப்பை கார்த்தி வழங்கியுள்ளார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஏற்கெனவே, கார்த்தி, ஹெச். வினோத், லோகேஷ் கனகராஜ், பாக்யராஜ் கண்ணன் ஆகியோரின் இரண்டாவது படத்தின் நாயகனானார். அதே சென்டிமெண்ட்டில், தற்போது சதீஷ் செல்வக்குமாருக்கும் வாழ்ப்பை வழங்கியுள்ளார். இந்த நிலையில், இப்படத்தில், நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்த விவாகரத்துக்குப் பிறகு நாயகியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.