நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உயிரிழந்தார். தனது தந்தையின் மறைவு தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “Until we meet again, Dad” என பதிவிட்டுள்ளார். ஜோசப் பிரபு தெலுங்கு ஆங்கிலோ இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கூட நேர்காணல் ஒன்றில் சமந்தா தனது தந்தையைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். சமந்தாவின் திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் பலரும் அவரது தந்தை இறப்பிற்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.