சினிமா

வெப் சீரிஸ் தயாரிக்கும் நடிகை ராதிகா: க்ரைம் த்ரில்லரில் மிரட்ட வரும் சரத்குமார்

sharpana

நடிகை ராதிகா புதிய வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கிறார். அதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

நடிகை ராதிகா சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியலிலும் கவனம் செலுத்தி வந்தார். ‘சித்தி’, ‘அரசி’, ‘வாணி ராணி’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் கடைசியாக ‘சித்தி 2’ சீரியலில் நடித்து வந்தார். திடீரென்று சீரியலில் இருந்து விலகியவர், தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி ‘இனி சீரியலில் நடிக்கமாட்டேன்’ என்று அறிவித்தார்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் வெப் சீரிஸ்க்காக தன்னுடைய ’ராடன்’ நிறுவனம் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார். ’தூங்காவனம்’, ‘கடாரம் கொண்டான்’ பட இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா இயக்கும் இந்த வெப் சீரிஸுக்கு ‘இரை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதில், சரத்குமார் ஹீரோவாக நடிக்கிறார். க்ரைம் த்ரில்லராக உருவாகும் இந்த வெப் சீரிஸ் குடும்ப ஆடியன்ஸ்களும் பார்க்கும் வகையில் உருவாக்கப்படு வருகிறது என்று கூறியுள்ளார் நடிகை ராதிகா.