சினிமா

ஓவியாவின் பதிவால் பரபரப்பான ட்விட்டர்!!

webteam

ஓவியாவின் பிக்பாஸ் கேள்விகளால் அவரது ட்விட்டர் பக்கம் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறது

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே அதிகம் பிரபலமானவர் நடிகை ஓவியா. அதற்கு முன்பு பல தமிழ் திரைப்படங்கள் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவருக்கு அதிக ரசிகர்கள் உருவாகினர். சமூக வலைதளங்களில் ஆர்மி தொடங்கப்பட்டு மீம்கள் பறந்தன. இந்நிலையில் அவ்வப்போது ட்விட்டரில் தலைகாட்டும் ஓவியா ரசிகர்களிடம் உரையாற்றுவார். அதன்படி பிக்பாஸ் தொடர்பான கேள்வி மூலம் ட்விட்டரில் பரபரப்பை கிளப்பியுள்ளார் ஓவியா.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்வதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? இல்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பலரும் கலவையான பதில்களை அளித்துள்ளனர். தடை செய்வது சரிதான் என்று சிலர் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சிமூலம் பலர் வெளி உலகிற்கு தெரிய வருவதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர். 

ரசிகர் ஒருவரின் பதிவுக்கு மீண்டும் பதில் அளித்த ஓவியா, டிஆர்பி-க்காக, போட்டியாளர்களை தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு  டார்ச்சர் செய்யக் கூடாது என்று விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். ஓவியாவின் பிக்பாஸ் கேள்விகளால் அவரது ட்விட்டர் பக்கம் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறது