சினிமா

புல்லாங்குழலுடன் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால் - புகைப்பட ஆல்பம்

sharpana

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடிகை காஜல் அகர்வால் கையில் புல்லாங்குழலுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கிருஷ்ணரின் பிறந்தநாளாக இன்று கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி வருகிறார்கள் மக்கள். அந்த வகையில், நடிகை காஜல் அகர்வாலும் உற்சாகமுடன் கொண்டாடியுள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு தற்போது தமிழிலும் தெலுங்கிலும் சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா’, ‘கோஷ்டி’, ‘கருங்காப்பியம்’ உள்ளிட்டப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். அதேசமயம், வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்துகிறார்.

இந்த நிலையில், இன்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி குங்குமப்பூ மற்றும் வெள்ளை நிற உடையில் கையில் புல்லாங்குழலுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் புன்னகையுடன் காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கிருஷ்ணர் சிலையுடன் புல்லாங்குழல், மயில் இறகுடன் கலர்ஃபுல்லாக கவனம் ஈர்க்கின்றன காஜல் அகர்வாலின் புகைப்ப்டங்கள்.