சினிமா

சம்பள பாக்கி கொடுக்காத கமல்: கவுதமி பரபரப்பு குற்றச்சாட்டு

Rasus

நடிகர் கமல்ஹாசனிடம் இருந்து தனக்கு இன்னும் சம்பள பாக்கி வரவில்லை என நடிகை கவுதமி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “ கமல்ஹாசனுடன் இன்னும் நான் இணைந்து செயல்படுவதாக வரும் செய்திகள் எனக்கு மனவருத்ததை அளிக்கிறது. கடந்த 2016 அக்டோபர் மாதம் அவரைவிட்டு நான் விலகி வந்ததில் இருந்து எனக்கும் அவருக்கும் எந்ததொடர்பும் கிடையாது. கமலுடன் 13 ஆண்டுகள் இணைந்திருந்த நேரத்தில் அவரது ராஜ்கமல் நிறுவனத்துக்காக ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினேன். கமல் நடித்த படங்களுக்கும் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி உள்ளேன். தசாவதாரம், விஸ்வரூபம் ஆகிய படங்களுக்கு எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது.

எனது வாழ்க்கையை நிர்மாணிக்க, நிலுவையில் உள்ள சம்பள பாக்கிதான் ஆதாரமாக உள்ளது. பல முறை கமல்ஹாசனிடமும், அவரது நிறுவனத்திடமிருந்தும் அதைக் கேட்டுப்பெற முயற்சித்தேன். ஆனால் இன்னும் சம்பள பாக்கி வரவில்லை” என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.