சினிமா

போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணை வளையத்தில் நடிகை தீபிகா படுகோன்

EllusamyKarthik

பாலிவுட் நடிகர் சுஷாந்திற்கு போதை பொருள் கொடுத்ததாக அவரது காதலியும், நடிகையான ரியா சக்கரவர்த்தி, அவரது சகோதரர் ஷோவிக் சக்கரவர்த்தி மற்றும் சுஷாந்த் வீட்டை நிர்வகித்து வந்த மேலாளர் சாமுவேல் மிரண்டாவை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அண்மையில் செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பாலிவுட் நடிகர் மற்றும் நடிகையர்கள் பலர் போதை வஸ்துக்களை பயன்படுத்துபவர்கள் என சொன்னதாக தகவல் பரவியது. இதில் நடிகை ரகுல் ப்ரீத், ஷ்ரத்தா கபூர் மற்றும் சாரா அலி கானின் பெயர்களை ரியா சொன்னதாக தெரிகிறது. 

இதனையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். 

அதே நேரத்தில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன் பெயரும் போதை வஸ்து பயன்படுத்தும் திரை பிரபலங்களின் பட்டியில் அடிப்பட்டது.

அதனையடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி தீபிகா படுகோனுக்கு சம்மன் அனுப்பியது தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் தலைமையகம். 

அவரும் இன்று விசாரணைக்கு ஆஜராகியிருந்தார்.

சுமார் ஐந்து மணி நேரம் தீபிகாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த விசாரணையில் தீபிகா போதை பொருள் பயன்படுத்தி உள்ளாரா என்பது குறித்த விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

அதே நேரத்தில் தீபிகாவின் மேலாளரின் மொபைல் போனில் இருந்து போதை பொருள் தொடர்பான மெசேஜ் சேட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.