சினிமா

நடிகை அமலா பால் புகாரில் மேலும் ஒருவர் கைது

நடிகை அமலா பால் புகாரில் மேலும் ஒருவர் கைது

webteam

நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரில் மலேசியாவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனத்தின் நிர்வாகிகளே பின்னணியில் இருந்தது அம்பலமாகியுள்ளது. இந்த வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

நடிகை அமலா பால் தியாகராய நகரில் உள்ள ஒரு நடனப் பள்ளியில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, பாலியல் தொல்லை அளித்ததாக அழகேஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மலேசியாவைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவர் தூண்டுதலில் இவ்வாறு நடந்து கொண்டதாக அழகேஸ்வரன் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். தொடர்ந்து விரிவான விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு, தனியார் நிறுவனத்தின் ஊழியரான பல்லாவரத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவரையும் கைது செய்த காவல்துறையினர் அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகி ஒருவரை தேடி வருகின்றனர்.