சினிமா

கேங்ஸ்டர்ஸ் நிறைந்திருக்கும்போதுதான் ‘மான்ஸ்டர்’ வருவார்: ’கேஜிஎஃப் 2’ புதிய அப்டேட்

sharpana

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ’கேஜிஎஃப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’  டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில், வரும் ஜூலை 16 ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ உலகம் முழுக்க வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவித்திருந்தது படக்குழு. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா என பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் அதிக கூட்டம் கூடும் இடம் என்பதால் தியேட்டர்கள் தாமதமாகத்தான் திறக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதனால், ‘கேஜிஎஃப் 2’ செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று சொல்லப்பட்டது. முன்பு படக்குழு ஜூலை 16 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்ததது. இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், படம் வெளியாகுமா? வெளியாகாதா? என்று எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்த நிலையில், புதிய வெளியீட்டு தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என்று இயக்குநர் பிரஷாந்த் நீல் அறிவித்திருக்கிறார். அவர், இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “தியேட்டர்களில் கேங்ஸ்டர்கள் நிறைந்திருக்கும்போதுதான் மான்ஸ்டர் வருவார். அவர் வரும் புதிய தேதியை விரைவில் அறிவிப்போம்” என்று அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார்.