சினிமா

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’: டப்பிங் பணிகளை நிறைவு செய்த வினய்

sharpana

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார் நடிகர் வினய்.

சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ வெளியாகி பாராட்டுகளைக் குவித்தது. அடுத்ததாக, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா- பிரியங்கா மோகன் இணைந்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ள, இப்படத்தில் வில்லனாக வினய் நடித்துள்ளார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தில் வில்லனாக வினய் மிரட்டியிருந்தார். தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் வில்லனாக நடிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், வினய் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். இதனை உற்சாகத்துடன் இயக்குநர் பாண்டிராஜுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.